×

20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமகவினர் விஏஓக்களிடம் மனு

திருமங்கலம், டிச.15: இருபது சதவீத தனி ஒதுக்கீடு வழங்ககோரி திருமங்கலம் தாலுக்காவிலுள்ள விஏஓக்களிடம் பாமக கட்சியினர் மனு கொடுத்தனர்.
அனைத்து சமுதாய மக்களுக்கும் அவரவர் எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று பாமக சார்வில் விஏஓக்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. திருமங்கலத்தில் பாமக மாநில துணைத்தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் சத்தியேந்திரன், துணை செயலாளர் கன்னையா தலைமையில் திருமங்கலம் டவுன், விடத்தகுளம், வடகரை, கிரியக்கவுண்டன்பட்டி, மல்லம்பட்டி, நடுக்கோட்டை, மைக்குடி, ராயபாளையம், காங்கேயநத்தம் உள்ளிட்ட  கிராமங்களில் விஏஓக்களிடம் மனு கொடுத்தனர். நிகழ்ச்சியில் பாமக திருமங்கலம் நகர செயலாளர் மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் ராஜாபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Pamakavinar ,VOs ,
× RELATED சேலம் அருகே கோயிலில் சாமி...