×

சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல் முதல்வர் வருகையை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் பெட்டி நுழைவு வாயிலுக்கு மாற்றம்

கரூர், டிச. 15: தமிழக முதல்வர் வருகையை முன்னிட்டு, கரூர் கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு வைக்கப்பட்டிந்த மனுக்கள் பெறும் பெட்டி, நுழைவு வாயில் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் நாளை (16ம்தேதி) அன்று கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வுபணிகள் மேற்கொண்டு ஆலோசனைகளை நடத்தவுள்ளார்.கொரோனா காலம் என்பதால் வாரந்தோறும் மனுக்கள் வழங்க வரும் பொதுமக்கள், மனுக்களை நேரிடையாக கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் வழங்காமல் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டுச் சென்றனர். இந்நிலையில், நேற்று திங்கள் கிழமையை முன்னிட்டு, ஏராளமானோர் மனுக்களுடன் அலுவலகம் வரை சென்று பின்னர், பெட்டியை காணாமல் தேடி அலைந்தனர். இதற்கு பிறகுதான், மனுக்கள் போடப்படும் பெட்டி, கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பொதுமக்கள் தங்களின் குறைகள் கொண்ட மனுவினை, பெட்டியில் வழங்கிச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : perimeter wall Relocation ,Chief Minister ,Collector ,visit ,office ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...