×

நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு

திருப்பூர்,டிச.15: திருப்பூரின் பல்வேறு பகுதியில் நடைபெற்று வரும் தொடர் செயின் பறிப்பு சம்பங்களால் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூர் பனியன் தொழிலுக்கு பெயர் போன ஊராக உள்ளது. இங்குள்ள பனியன் கம்பெனிகளில் வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தொழிலாளர்கள் வந்து தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இங்கு கடின உழைப்பு மூலம் தொழிலாளர்கள் சிறுக ,சிறுக நகைகளை சேர்த்து வைத்து அணிந்து வருகின்றனர். அதனை அணிந்து செல்லும் பெண்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்து நகைகளை பறித்து செல்வது, லாவகமாக பேசி நகைகளை பறித்து செல்வது போன்ற செயல்கள் அதிகரித்துள்ளது. இது குறித்து சமந்தப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தாலும், அதன் மீது பெரிய நடவடிக்கைகள் ஏதுவும் இல்லை. இதனால் நகை அணிந்து செல்ல பெண்கள் அச்சப்பட கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. வழிப்பறி மற்றும் சங்கலிபறிப்பு குற்றங்களை தடுக்க  போலீசார் முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : jewelry theft incidents ,
× RELATED வைக்கோல் ஏற்றி வந்த வேன் மின் ஒயர் உரசி தீ பற்றியது