×

காவல்நிலையம் முன் தீக்குளித்து பலியான ஆட்டோ டிரைவரின் மகள் மேட்டுப்பாளையத்தில் மீட்பு: காதலன் போக்சோவில் கைது

தாம்பரம்: தாம்பரம் அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (44), ஆட்டோ டிரைவர். இவரது 13 வயது மகள் கடந்த 3ம் தேதி மாயமானார். சேலையூர் போலீஸ் விசாரணையில் காமராஜபுரம், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த கல்லூரி  மாணவனுடன் வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. அதன்பின் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த சீனிவாசன், கடந்த 5ம் தேதி சேலையூர் காவல் நிலையம் முன் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து  இறந்தார். இந்நிலையில், ஊட்டிசென்ற காதல் ஜோடி பணம் செலவானதால் வெளியே வந்து இருவரும் கைகளை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தகவலறிந்து, மேட்டுப்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர், சேலையூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று இருவரையும் மீட்டு நேற்று முன்தினம் இரவு சென்னை அழைத்து வந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணைக்கு பின், கல்லூரி மாணவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Tags : Auto driver ,fire ,Mettupalayam ,police station ,
× RELATED ஆம்பூர் தீ விபத்து: 5,000 கோழிகள் உயிரிழப்பு