×

போலீஸ்காரர் ரயிலில் அடிபட்டு சாவு

கோவை, டிச.11:  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்திர பொகரா (37). சி.ஆர்.பி.எப் போலீஸ்காரர். குருடம்பாளையம் பகுதி முகாமில் பணியாற்றி வந்தார். சொந்த ஊர் சென்றிருந்த இவர் நேற்று முன்தினம் கோவைக்கு ரயிலில் வந்து கொண்டிருந்தார். வடகோவை ரயில் நிலையம் வந்ததும் வேகமாக ரயிலில் இருந்து உடைமைகளுடன் இறங்க முயன்றார். அப்போது அவர் கால் தவறி ரயில் நிற்கும் முன் பிளாட்பார இடைவெளியில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த இவர், சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Tags : Policeman ,
× RELATED டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது...