×

ரெகுநாதபுரத்தில் புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் அடிக்கடி நடக்குது வழிப்பறி

கீழக்கரை, டிச.11: வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் தொடர்வதால் ரெகுநாதபுரத்தில் புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் திருப்புல்லாணியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருப்புலாணியிலிருந்து ரெகுநாதபுரம் செல்லும் ராணி மங்கம்மாள் சாலை சுற்றி ஏழு ஊராட்சிகள் உள்ளன. திணைகுளம், வண்ணாங்குண்டு, பத்திரதரவை, பெரியபட்டினம், வாலாந்தரவை உள்ளடங்கி 18 கிராமங்கள் உள்ளன. இங்கு நாளுக்குநாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதத்தில் 5க்கும் மேற்பட்ட வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது. எனவே ரெகுநாதபுரத்தில் புறக்காவல்நிலையம் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மக்கள் கூறுகையில், திருப்புலாணியில் இருந்து 12 கிலோமீட்டர் ரோந்து செல்வது போலீசாருக்கு அதிக அளவு சிக்கல் ஏற்படுகிறது. திருப்புல்லாணியில் இருந்து சுற்று வட்டார கிராமங்களுக்கு தனியாக காவல் நிலையம் உள்ளன. இந்த நிலையில் ரெகுநாதபுரத்தில் தனியாக புறக்காவல் நிலையம் அமைந்தால் சுற்றுவட்டார கிராமங்களில் நடக்கும் சட்டம்-ஒழுங்கை பராமரிக்கலாம். ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகத்தில் புறக்காவல் நிலையம் அமைப்பதற்கு தனியாக இடவசதி செய்து கொடுக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த தீர்மானத்தின் அடிப்படையில் புறக்காவல் நிலையம் அமைந்தால் சாலையோரம் வழிப்பறி, திருட்டு, செயின் பறிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மேலும் சுற்றுவட்டார கிராமங்களில் அனைத்து திருவிழாக்கள்,  பண்டிகைக்கால பாதுகாப்புக்கு இங்கிருந்து கூடுதல் போலீசாரை நியமிக்கலாம். எனவே ரெகுநாதபுரத்தில் புறக்காவல்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : outpost ,Regunathapuram ,
× RELATED கொள்ளிடம் அருகே மாதானம் புறக்காவல்...