பட்டுக்கோட்டை, டிச. 11: பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்தில் உள்ள புலவஞ்சி, சிரமேல்குடி, பெரியகோட்டை, நெம்மேலி, விக்ரமம் ஆகிய தேர்வு செய்யப்பட்ட மண்வள அட்டை செயல்விளக்க கிராமங்களில் உலக மண்வள தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது விவசாயிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி, வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் வேளாண் உதவி அலுவலர்கள் சுரேஷ், ஜெரால்ட், பாபி, முருகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.