திருவள்ளூர்: திருவள்ளூர், வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானத்தின் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை: கொரானா தொற்றுக்காரணமாக அரசாங்க பரிந்துரைப்படி, திருவள்ளூர் வைத்திய வீரராகவ ஸ்வாமி தேவஸ்தானம் சார்பாக அமாவாசையை முன்னிட்டு வரும் 13ம் தேதி மதியம் 12 மணி முதல் 14 இரவு வரை பொதுமக்கள் தரிசனம் கிடையாது. எனவே யாரும் வருகை தர வேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.