×

முகிலன் குடியிருப்பில் ₹4 லட்சத்தில் கலையரங்கம் ஆஸ்டின் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

தென்தாமரைகுளம்,டிச.11: முகிலன் குடியிருப்பு மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அய்யா அருள்பதி வளாகத்தில்,  கன்னியாகுமரி எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹4 லட்சம்  மதிப்பில் புதிய கலையரங்கம் கட்டப்பட்டது. புதிய கட்டிடத்தின்  திறப்பு விழா நேற்று காலை நடந்தது. அருள்பதி தலைவர் அப்பா சுவாமி நாடார்  தலைமை வகித்தார். முகிலன் குடியிருப்பு ஊர்த்தலைவர் ஆர்.எஸ். பார்த்தசாரதி,  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி, தென்தாமரைகுளம் பேரூராட்சி  செயல் அலுவலர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில்  ஆஸ்டின் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக பங்கேற்று திறந்தவெளி  கலையரங்கத்தை திறந்து வைத்து பேசினார். அருள்பதி  துணைத்தலைவர் ரெத்தினசாமி, செயல் தலைவர் முருகன், பொருளாளர் செல்வன் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : Gallery Austin MLA ,Mughal ,apartment ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை