×

தைப்பூச திருவிழா சிறப்பு ரயில்களுக்கு மேல்மருவத்தூரில் தற்காலிக நிறுத்தம்

நாகர்கோவில், டிச.11: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: மேல்மருவத்தூர் கோயிலில் இருமுடி மற்றும் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக டிசம்பர் 11 முதல் ஜனவரி 29 வரை மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் அனுமதிக்கப்பட்டுள்ளது.  ரயில் எண் 06064 நாகர்கோவில் ஜங்ஷன் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்  டிசம்பர் 11ம் தேதி முதல் 2021 ஜனவரி 22ம் தேதி வரை மேல்மருவத்தூரில் அதிகாலை 2.48க்கு சென்று  2.50க்கு புறப்பட்டு செல்லும்.  ரயில் எண் 06063 சென்னை எழும்பூர்-நாகர்கோவில் ஜங்ஷன் சிறப்பு ரயில் டிசம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை மேல்மருவத்தூரில் இரவு 8.13க்கு சென்று  8.15க்கு புறப்படும்.  ரயில் எண் 06012 ஹஸ்ரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் டிசம்பர் 12 முதல் ஜனவரி 25 வரை மேல்மருவத்தூரில் மாலை 5.43க்கு சென்று  5.45க்கு செல்லும்.  ரயில் எண் 06011 கன்னியாகுமரி - ஹஸ்ரத் நிஜாமுதீன் சிறப்பு ரயில்  டிசம்பர் 16ம் தேதி முதல் ஜனவரி 27ம் தேதி வரை மேல்மருவத்தூரில் காலை 6.43க்கு சென்று  6.45க்கு செல்லும்.

Tags : festival ,Melmaruvathur ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...