×

வேலைநிறுத்தம் வாபஸ் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி பயணம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றதை தொடர்ந்து, 12 நாட்களுக்கு பிறகு நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களையும், பறிமுதல் படகுகளை விடுவிக்கவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி, ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கங்களின் சார்பில், கடந்த 11ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.

இதனால் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. மேலும், ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் ரயில் மறியல் போராட்டமும் நடந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த பேச்சு வார்த்தையில், மீனவர்களின் கோரிக்கைகள் ஒன்றிய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து 12 நாட்களுக்கு பிறகு நேற்று, 350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு சென்றனர். இதனால் வெறிச்சோடி கிடந்த மீன்பிடி துறைமுகம் நேற்று சிறிது பரபரப்பாக காணப்பட்டது.  எனினும் இலங்கை கடற்படையின் தொடர் சிறைபிடிப்பு நடவடிக்கை மற்றும் கடும் அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையால், நேற்று 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Tags : Rameshwaram ,EU government ,Sri Lanka ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!