×

கூடுதாழைக்கு ரூ.95 லட்சத்தில் புதிய தார்சாலை இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

பணகுடி, டிச. 11: திருச்செந்தூர்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இருந்து கூடுதாழைக்கு ரூ.95 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணியை இன்பதுரை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.ராதாபுரம் தொகுதி மீனவ கிராமமான கூடுதாழைக்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான துவக்கவிழா கூடுதாழை கிராமத்தில் நடைபெற்றது.திருச்செந்தூர்- கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் இருந்து ராதாபுரம் தொகுதி கூடுதாழை கிராமத்திற்கு செல்லும் தார்சாலை மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் இருந்தது. இதனால் இப்பகுதி பொதுமக்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரையிடம் கூடுதாழை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அவர், தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்றதை தொடர்ந்து ரூ.96 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைப்பதற்கான ஆணையை நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டது. இதையடுத்து புதிய சாலை அமைப்பதற்காக துவக்க விழா கூடுதாழையில் நடந்தது. பங்குத்தந்தை வில்லியம் தலைமை வகித்தார். இன்பதுரை எம்எல்ஏ கலந்து கொண்டு சாலை பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம் கிழக்கு கேபிகே செல்வராஜ், மேற்கு அந்தோணி அமலராஜா, மாவட்ட மகளிரணி செயலாளர் ஜான்சிராணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் லிகோரி, ஸ்டீபன், சுகுமார், முன்னாள் ஊராட்சி செயலாளர் ராஜன், உவரி ரமேஷ் இன்பம், ஜான்சன், ஜெகன், ஜோசப் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Inbathurai MLA ,
× RELATED இன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்