×

பாளை சாந்திநகரில் வாலிபர் வெட்டி கொலை

நெல்லை, டிச.11:  நெல்லை பேட்டை அனவரத விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சங்கரன் மகன் காளிராஜ்(30). இவரது வீட்டின் அருகே சித்தப்பா இசக்கிமுத்து வீடு உள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு காளிராஜ் தனது சித்தப்பா மகள் மேகலா(24)வை இரு வீட்டினரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து வெளியேறி, பாளை ரகுமத்நகர் 60 அடி சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். சாந்திநகரில் கேபிள் டிவிக்கு பணம் வசூலிக்கும் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு பணம் வசூலித்துவிட்டு சாந்திநகர் சாலையில் காளிராஜ் வந்தபோது, எதிரே 3 பைக்குகளில் 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அவர்கள் காளிராஜ் பைக்கை தட்டிவிட்டு அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த மாநகர போலீஸ் துணைகமிஷனர் சரவணன், பாளை உதவி கமிஷனர் ஜான்பிரிட்டோ, பாளை இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், எஸ்ஐ மகேஷ்குமார் மற்றும் போலீசார், காளிராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் காளிராஜ் தனது சித்தப்பா மகளை திருமணம் செய்ததால், ஆத்திரம் அடைந்த உறவினர்கள் அவரை வெட்டிக்கொலை செய்திருக்கலாம் என்கிற தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. ேபாலீசார் மேல்விசாரணை நடத்தி, காளிராஜை கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.

Tags : death ,Palai Chandinagar ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...