×

பாலிடெக்னிக்கில் அரியர் தேர்வு எழுத வாய்ப்பு

கோவில்பட்டி, டிச. 11: கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் வெளியிட்ட செய்திகுறிப்பு: சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்கக சுற்றறிக்கையின்படி 1984 முதல் தற்போது 2020 பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று டிப்ளமோ நிறைவு செய்யாமல் அரியர் வைத்துள்ள அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும் சிறப்பு கருணை அடிப்படையில் வாரியத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அரியர் பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை கல்லூரி அலுவலகத்தில் இன்றைய தினத்திற்குள் (11ம்தேதிக்குள்) செலுத்த வேண்டும். ஏப்ரல் 2020ல் தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. அரியர் வைத்துள்ள முன்னாள் மாணவர்கள் தங்களது முந்தைய தேர்வு எழுதிய மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கல்லூரியில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் செலுத்தி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இத்தேர்வு நடைபெறும் முறை மற்றும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Aryan ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே விவசாயி வீட்டில் கொள்ளை