×

ராயனூர் இலங்கை தமிழ் அகதிகள் முகாம் சுற்று சுவர் அருகில் சாக்கடை வடிகால் பணியை விரைந்து முடிக்க வேண்டும்

கரூர், டிச. 11: ராயனூர் இலங்கை தமிழர்கள் முகாம் சுற்றுச்சுவர் அருகே நடைபெற்று வரும் சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் ராயனூரில் இலங்கை தமி்ழ் அகதிகள் முகாம் உள்ளது. முகாம் பகுதி முழுவதும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராயனூர் நான்கு ரோடு அருகே சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள சாக்கடை வடிகால் சிதிலமடைந்த காரணத்தினால் தற்போது சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இந்த பகுதியை சுற்றிலும் உள்ள பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : sewerage work ,perimeter wall ,Rayanoor ,Sri Lankan Tamil Refugee Camp ,
× RELATED கரூர் ராயனூர் பகுதியில்...