×

கரூர் வெங்கமேடு அருகே கட்டிட பணி செய்த மேஸ்திரி தவறி விழுந்து பரிதாப பலி

கரூர், டிச. 11: கரூர் வெங்கமேடு அருகே கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த மேஸ்திரி தவறி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் வெங்கமேடு அடுத்துள்ள வாங்கப்பாளையம் காந்திநகரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(56). கட்டிட மேஸ்திரி. இவர் பஞ்சாமாதேவி பகுதியில் கட்டிட பணியில் சில வாரங்களாக ஈடுபட்டு வந்தார். கடந்த மாதம் 23ம் தேதி அன்று கட்டிட பணியில் ஈடுபட்ட போது, தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் வெங்கமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Master ,Karur Venkamedu ,
× RELATED கொங்கு மண்ணை ஆண்ட.மாவீரன் தீரன்...