×

இனாம்குளத்தூரில் நாளை ஆண்களுக்கு கு.க. முகாம்

திருச்சி, டிச.10: திருச்சி அருகே இனாம்குளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கு பெறும் ஆண்களுக்கு அரசு வழங்கும் ஈட்டுத்தொகை ரூ.1,100 வழங்கப்படும். ஓரிரு நிமிடங்களில் மயக்க மருந்து கொடுக்கப்படாமல் அறுவை சிகிச்சை செய்யப்படும். அறுவை சிகிச்சைக்கு பின்பு மருத்துவமனையில் தங்கவேண்டியதில்லை. சிகிச்சை முடிந்த பிறகு வீட்டிற்கு செல்லலாம். கத்தியின்றி ரத்தசேதமின்றி, தையல், தழும்புமின்றி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பின் விளைவுகள் ஏதும் இருக்காது. எனவே, விருப்பமுள்ள ஆண்கள் இந்த அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags : men ,
× RELATED இலுப்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்