×

வஉசி பேரவை திடீர் மறியல்:போலீஸ் தடியடி

திருச்சி, டிச.10: அகில இந்திய வஉசி பேரவை சார்பில் 7 உட்பிரிவுகளை இணைத்து ேதவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க பரிந்துரை செய்யப்படும் என அறிவித்த முதல்வரை கண்டித்து திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே நேற்று வஉசி பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில தலைவர் லெட்சுமணன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தும், அவர்கள் மறியலில் தொடர்ந்து ஈடுபட்டதால் போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதைத்தொடர்ந்து மறியல் செய்த 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Wausau ,council raid ,
× RELATED போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில்...