×

கரூர் புலியூர் வளைவு சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர் அகற்றப்படுமா?

கரூர், டிச. 10: கரூர் புலியூர் வளைவு சாலையில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதனை அகற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர். புரவி புயல் சின்னம் காரணமாக நேற்று மாலை கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் எதிரொலியாக தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளது. இதன்படி, கரூர் திருச்சி சாலை புலியூர் வளைவுச் சாலையில் மழைநீர் குளம் போல தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி விட்டனர். எனவே, இதுபோன்ற பிரதான சாலையோரங்களில் மழைநீர் தேங்குவதை கண்டறிந்து அதனை முற்றிலும் சரி செய்ய தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்து எதிர்பார்த்துள்ளனர்.

Tags : Karur-Puliyur ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி