×

பழநியில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம்

பழநி, ஆக. 21: பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுமென பழநி நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழநி நகரில் திருமண மண்டபங்கள், லாட்ஜ்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் அதிகளவில் உள்ளன. இவற்றில் இருந்து அனுதினமும் ஏராளமான குப்பைகள் சாலைகளில் கொட்டப்படுகின்றன. இதனால் நகர் முழுவதும் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. அதற்கு பதிலாக குப்பைகளை சேமித்து மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து தூய்மை பணி வாகனங்கள் வரும் போது ஒப்படைக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் சிலர் அறிவிப்பை பின்பற்றாமல் சாலைகளிலே கொட்டுகின்றனர். எனவே இனிவரும் காலங்களில் சாலைகளில் குப்பைகளை கொட்டினால் அபராதம் விதிக்கப்படுமென நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள், தட்டுகள், மேஜை விரிப்புகளை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Palani ,Palani Municipal Administration ,
× RELATED ஓய்வூதியர் தின விழா