×

பரமக்குடி அருகே பானிபூரி வியாபாரியை தாக்கி செயின் பறிப்பு டூவீலரையும் பிடுங்கி சென்றனர்

பரமக்குடி, டிச.10: பரமக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பானிபூரி வியாபாரியை தாக்கி  2 பவுன் செயின் மற்றும் பணம் பறிக்கப்பட்டுள்ளது. பரமக்குடி முள்ளியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை(45). இவர் வைகை நகர் பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கடையை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் சொந்த ஊரான முள்ளியனேந்தல் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தனர். அவரை சரமாரியாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை பவுன் செயின் மற்றும் பையில் வைத்திருந்த ரூ.6,000 பணம் ஆகியவற்றை பறித்தனர். மேலும் அவர் ஓட்டி வந்த டூவீலர் வாகனத்தை பறித்துக் கொண்டு, நடுரோட்டில் நிற்க வைத்துவிட்டு தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணாதுரை சம்பவம் குறித்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் சாமுவேல் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகிறார். பானிபூரி வியாபாரியை தாக்கி, நகை, பணம், டூவீலர் பறிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : trader ,Paramakudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்