×

புரெவி புயலால் வீடு இழந்தவருக்கு திமுக நிதியுதவி

பரமக்குடி, டிச.10: புரெவி புயலால் வீடு இழந்தவருக்கு திமுக சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. பரமக்குடி தாலுகா போகலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள  பொட்டிதட்டி ஊராட்சியில் புரெவி புயல் மழையால் வீராச்சாமி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதனால் குடும்பத்துடன் அருகில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வருகின்றார்.  போகலூர் ஒன்றிய திமுக பொருளாளர் குணசேகரன் தனது சொந்த பணத்தில் இருந்து திமுக சார்பாக ரூ.10 ஆயிரம் வழங்கினார். இதனை ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் வீடு இழந்த வீராச்சாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் போகலூர் ஒன்றிய திமுக பொறுப்பாளர் கதிரவன், போகலூர் ஒன்றிய தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய துணைத் தலைவர்  பூமிநாதன், ஒன்றியக் கவுன்சிலர் பாதாள பைரவன் தேன்மொழி,  ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் விஜயராஜா, ஒன்றிய  இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தரசு, செவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் சின்னாள், ஊராட்சி செயலாளர்கள் பால்ராஜ், காமராஜ், சாத்தையா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,homes ,storm ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி