×

அரசு வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.22 லட்சம் மோசடி

அவனியாபுரம், டிச.10:  அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.22 லட்சம் மோசடி செய்த பெண் உள்பட இரண்டு பேர் மீது அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த சனாதனன் மகன் மகேஷ்(32). இவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ராஜபாளையத்தை சேர்ந்த சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ஊழியர் பழனிசாமி மற்றும் காரைக்குடியைச் சேர்ந்த அரசு ஊழியர் சின்னதம்பி மகள் கீதா ஆகிய இருவரும் ரூ.22 லட்சம் பணம் வேண்டும் என கூறியுள்ளனர். அதன்படி மகேஷ் ரூ.22 லட்சம் பணத்தை அவனியாபுரம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் வைத்து கடந்த 22ம் தேதி கொடுத்துள்ளார். பணி வாங்கி தராத நிலையில் பணத்தை கேட்க இருவரும் கொடுக்க மறுத்து விட்டனர். இதுகுறித்து மகேஷ் கொடுத்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார், பழனிசாமி, கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : teenager ,
× RELATED முள்ளக்காடு அருகே கோயில் திருவிழாவில் வாலிபர் மீது தாக்குதல்‘