×

சிவகிரியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் 13 பெண்கள் உள்பட 139 பேர் கைது

சிவகிரி, டிச. 10: சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 13 பெண்கள் உள்ளிட்ட 139 பேரை போலீசார் கைதுசெய்தனர்.  மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை ஆதரித்தும், இச்சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தியும் சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட்,  மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. சிவகிரி சென்ட்ரல் வங்கி முன்பாக நடந்த இந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இந்திய கம்யூனி–்ஸ்ட் மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட துணைச்செயலாளர் இசக்கிதுரை, வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் தங்கவேலு, மாவட்டக்குழு உறுப்பினர் சிங்காரவேலு, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்துபாண்டி, ஒன்றியச் செயலாளர் நடராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ராமசுப்பு, சுப்பிரமணி, சக்திவேல், பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலாளர் தங்கபாண்டியன், மாவட்டத் தலைவர் முருகானந்தம், ஒன்றியத் தலைவர் மாரியப்பன், தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 13 பெண்கள் உள்ளிட்ட 139 பேரை கைதுசெய்த சிவகிரி போலீசார், சேனைத்தலைவர் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags : road blockade ,Sivagiri ,
× RELATED பொதுமக்கள் சாலை மறியல்