ஒட்டன்சத்திரம், ஆக. 20: ஒட்டன்சத்திரம் வட்டம், சின்னக்காம்பட்டி 22 கே.வி. துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.21ம் தேதி, வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சின்னக்காம்பட்டி, இடையகோட்டை, குத்திலுப்பை, ஐ.வாடிப்பட்டி, கொங்கபட்டி, நவகானி, இடையன்வலசு, இ.கல்லுப்பட்டி, வலையபட்டி, கொ.கீரனூர், சாமியாடிபுதூர், நரசிங்கபுரம்,
ஜவ்வாதுபட்டி, பாறைப்பட்டி, அண்ணாநகர், அய்யம்பாளையம், எல்லப்பட்டி, மார்க்கம்பட்டி, மாம்பாறை, பெருமாள் கவுண்டன்வலசு, கக்கநாயக்கனூர், நாரப்பநாயக்கன் வலசு, அத்தப்பன்பட்டி, புல்லா கவுண்டன் வலசு, குளிப்பட்டி, வலையபட்டி, ஜோகிபட்டி, நாகப்பன்பட்டி, ஓடைப்பட்டி, சோழியப்பகவுண்டனூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மணிமேகலை தெரிவித்துள்ளார்.
