×

கெங்கவல்லி, வாழப்பாடியில் சந்து கடைகளில் மது விற்பனை 4 பெண்கள் உள்பட 13 பேர் கைது

வாழப்பாடி, டிச.10:  சேலம் மாவட்ட எஸ்பி தீபா கனிக்கர் உத்தரவின் பேரில், வாழப்பாடி, ஏத்தாப்பூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட வாழப்பாடி பேருந்து நிலையம், பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம், வைத்தியகவுண்டன்புதூர் மற்றும் பெரிய கிருஷ்ணாபுரம் தேசிய நெடுஞ்சாலை, சிங்கிபுரம், வேப்பிலைப்பட்டி, புளுதிக்குட்டை, கோணஞ்செட்டியூர், குறிச்சி ஆகிய இடங்களில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது, சந்துகடைகளில் மது விற்பனையில் ஈடுபட்ட அருள்மணி (44), ராமர் (53), கரன் (23), பொன்னாரம்பட்டி முருகேசன் (50), சிங்கிபுரம் லோகாம்பாள் (60), நடேசன் (75) கோணஞ்செட்டியூர் ராமசந்திரன் (58), செல்லம்மா (40), மேட்டுப்பட்டி மாதேஸ் (55), புழுதிக்குட்டை குப்பன் (60) உள்பட 11 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 590 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், கெங்கவல்லியில் போலீசார் நடத்தி சோதனையில், வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை  செய்து கொண்டிருந்த விஜயா, மணிமேகலை ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்

Tags : women ,Kengavalli ,alley shops ,Vazhappadi ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது