×

செம்மாண்டப்பட்டியில் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

காடையாம்பட்டி, டிச.10:  காடையாம்பட்டி அடுத்த செம்மாண்டப்பட்டியில், பிரிவு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர், தார்சாலையை கடந்து வெளியேற வழியில்லாதால், மறுபுறம் செம்மாண்டப்பட்டி ஊராட்சியில் தெருக்கள் வழியாக செல்கிறது. இங்கு சாக்கடை கால்வாய் இல்லாதால், சாலையில் கழிவுநீர் மாதக்கணக்கில் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.  ஒன்றிய கவுன்சிலர் சாமுராய்  குரு, இரண்டு ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை  புகார் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சாக்கடை பிரச்னைக்கு தீர்வுகாணாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : streets ,Chemantapatti ,
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...