×

சென்னை புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க 254 கோடியில் வடிகால்வாய்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வேளச்சேரி: கோவிலம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழைநீர் வடியாத இடங்களை அமைச்சர்கள் செங்கோட்டையன், பெஞ்சமின் ஆகியோர் பார்வையிட்டனர். இதையடுத்து கோவிலம்பாக்கம், நன்மங்கலம், மேடவாக்கம், வேங்கைவாசல் போன்ற இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினர். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது, “புயல்களால் ஏற்பட்ட சேதங்களை நேரிடையாக சென்று பார்வையிட்டு தேங்கி உள்ள மழைநீரை வெளியேற்ற கால்வாய்கள் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. சென்னை புறநகரில் பிரச்னைகளுக்கு நிரந்தரமாக தீர்வு காண உலக வங்கி உதவியுடன் திட்டங்களை செயல்படுத்தி வடிகால்வாய்கள் அமைக்க 2 கட்டமாக 184 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. 3ம் கட்டமாக 254 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Tags : Minister Senkottayan ,suburbs ,Chennai ,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...