×

ராசிபுரத்தில் தொடர் கைவரிசை பிரபல கொள்ளையர்கள் 3 பேர் அதிரடி கைது

ராசிபுரம், டிச.9: ராசிபுரத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கைவரிசை காட்டி வந்த 3 பிரபல கொள்ளையர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 25 பவுன் நகை மற்றும் சொகுசு கார், டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நாமகிரிப்பேட்டை மற்றும் வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக, தொடர் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இது தொடர்பான புகார்களின் பேரில், ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று ராசிபுரம்-நாமக்கல்  சாலையில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற சொகுசு காரை நிறுத்தி, விசாரணை மேற்கொண்டபோது, காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், காருடன் 3 பேரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரங்கேறிய தொடர் கொள்ளையி சம்பவங்களில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ்(எ) ஸ்டீபன்(37), மதுரையை சேர்ந்த விஜய்சங்கர்(46), சிவராஜ்(44) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 25 பவுன் நகை, கொள்ளைக்கு பயன்படுத்திய ₹2.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில், இவர்கள் 3 பேருக்கும் பல்வேறு கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

Tags : robbers ,Rasipuram ,
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்