×

விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் திமுக தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, டிச.9: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, தர்மபுரி மாவட்டம் முழுவதும் திமுக தலைமையில் கூட்டணி கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி நான்குரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமை வகித்தார். இதில், காங்கிரஸ் செந்தில், தி.க.சிவாஜி, ஊமை ஜெயராமன், மதிமுக தங்கராஜ், வீரமணி, வஜ்ஜிரவேல், சிவலிங்கம், சிபிஎம் டில்லிபாபு, மாரிமுத்து, ராமசந்திரன், கந்தசாமி, கிரேசிமேரி, சிபிஐ தேவராஜ், விசிக ஜெயந்தி, பாண்டியன், மின்னல்சக்தி, ஜெகநாதன், இந்திய முஸ்லீம் லீக் நிஜாமுதீன், மமக தென்றல் யாசின், ஆதிதமிழர் பேரவை முருகன், திமுக முன்னாள் எம்பி தாமரைசெல்வன், நகர பொறுப்பாளர் அன்பழகன், நாட்டான் மாது, தங்கமணி, சந்திரமோகன், சிவன், முல்லைவேந்தன், காசிநாதன், பொன்.மகேஸ்வரன், கிள்ளிவளவன், ராஜா, ரவி, வெல்டிங் ராஜா, முத்துலட்சுமி, உதயசூரியன், இந்திராமூர்த்தி மற்றும் தொமுச சின்னசாமி, சரவணன் மற்றும் விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அனைத்து தோழமைக் கட்சிகள், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் துரைசாமி, அதியமான், வீரமணி, ஆறுமுகம், பழனிச்சாமி, சின்னபெருமாள், துரைசாமி, தர்பார் முனுசாமி, ரங்கநாதன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர். கிருஷ்ணாபுரம் கூட்டுரோட்டில் திமுக மருத்துவ அணி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் பிரபுராஜசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதிமுக டாக்டர் ஆசைபாஷா, ராஜலிங்கம், மகாலிங்கம், லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் எச்சனஅள்ளி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கம்யூனிஸ்டு அப்புனு, சின்னசாமி, மல்லையன், மாதேஷ், விசிக சந்தானமூர்த்தி, கண்ணன், சித்தன், வேலு, கிருஷ்ணன், பாண்டுரங்கன், ராஜகோபால், சரவணன், பிரபாகரன், சாம்ராஜ், மோகன்குமார் மற்றும் தாண்டவன், மூர்த்தி, மணி, சகாதேவன், சண்முகம், சின்னசாமி, வாசு, மாதேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்: பென்னாகரம் பஸ் ஸ்டாண்டில், மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் மாதன், ஜீவானந்தன், விசிக கருப்பண்ணன், காங்கிரஸ் நரேந்திரன், வீரமணி, காளியப்பன், மடம் முருகேசன், பிரஸ் சிவகுமார், தன்டாளன், சிகரலஅள்ளி சுரேஷ், பெரும்பாலை துரைசாமி, வினு அன்பழகன், ஒகேனக்கல் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Coalition parties ,protest ,Bharat Bandh DMK ,
× RELATED தொகுதி பங்கீடு நிறைவு பீகாரில் ஆர்ஜேடி 26, காங். 9, கம்யூ. 5 இடங்களில் போட்டி