×

மாவட்டம் முழுவதும் 3,025 பேர் கைது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.ஆர்.ராதா காலமானார்

கும்பகோணம், டிச. 9: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் துவரங்குறிச்சி கீழத்தெருவை சேர்ந்தவர் எஸ்.ஆர். ராதா (85). அதிமுக முன்னாள் அமைச்சர். இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். மதுரையில் மகள் வீட்டில் வசித்து வந்தார். அவ்வப்போது கும்பகோணம் வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ராதா. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் இறந்தார். அதிமுகவை சேர்ந்த இவர் 1977ம் ஆண்டு கும்பகோணம் தொகுதியில் வெற்றி பெற்றார். 1989ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். எம்ஜிஆர் அமைச்சரவையில் ஜவுளி மற்றும் வீட்டுவசதி வாரிய அமைச்சராக பதவி வகித்துள்ளார். தற்போது அதிமுகவிலிருந்து ஒதுங்கி இருந்தார். சென்னையிலிருந்து நேற்று இரவு அவரது உடல் கும்பகோணம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து எஸ்.ஆர்.ராதா விருப்பப்படி அவரது உடல் இன்று தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது.

Tags : SR Radha ,AIADMK ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...