×

வருசநாடு அருகே சூறைக்காற்று வேரோடு சாய்ந்த இலவ மரங்கள்

வருசநாடு, டிச. 9:  வருசநாடு அருகே தர்மராஜபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் இப்பகுதியை சேர்ந்த முத்து, சங்கிலி ஆகியோரது வீடுகள் மீது இலவ மரம் சாய்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து உடனே மின்வாரிய அலுவலகத்திற்கும், கடமலைக்குண்டு போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் இதுவரை யாரும் நேரில் வந்து பார்வையிடவில்லை. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தர்மராஜபுரத்தில் சூறைக்காற்றுக்கு இலவ மரங்கள் அடிக்கடி சாய்ந்து வருகின்றன. சாய்ந்த மரங்களை அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் உயிர்சேதம் ஏற்பட்டாலும் இப்படிதான் உதவுவார்களா. எனவே இதுபோன்ற பணிகளில் மெத்தனமாக இருக்கும் அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : hurricane ,Varusanadu ,
× RELATED வெளிமாநில வரத்து அதிகரிப்பு வருசநாட்டில் தேங்கும் தேங்காய்கள்