×

மனிதநேய ஜனநாயக கட்சியினர் ரயில் நிலையத்தை முற்றுகை

கோவை, டிச. 9: நாடு முழுவதும்  மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நேற்று பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினர் போராட்டங்களை நடத்தினர். இதன் ஒரு பகுதியாக கோவையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாலையில் கொட்டும் மழையில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அபாஸ் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் மத்திய அரசை கண்டித்தும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Democrats ,train station ,
× RELATED வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில்...