×

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ரயில் மறியல் முயற்சி: 71 பேர் கைது


கோவை, டிச. 9: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கோவை ரயில் நிலையத்தில், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 71 பேரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 13வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பங்கேற்று வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அவர்கள் ரயில் நிலையத்திற்குள் நுழைய முன்றனர். அப்போது, அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர். அதன்படி, மொத்தம் 71 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Parties ,STBI ,
× RELATED அறிவொளி கருப்பையா தகவல் கட்சியினர் வீதிவீதியாக வாக்குசேகரிப்பு