ஜனநாயக சமூகநல கூட்டபை–்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் அளித்த மனுவில், பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு அரிசி தரமற்றதாகவும், துர்நாற்றம் வீசக் கூடியதாகவும் உள்ளது. மோசமான அரிசியில் உணவு சமைத்து பள்ளி குழந்தைகளுக்கு தருகின்றனர். அதேபோல பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டை குறைந்த எடையில் உள்ளது. தரமற்ற அரிசி, முட்டை வழங்குவதால் குழந்தைகளின் உடல் நலன் பாதிக்கப்படும். எனவே தரமான அரிசி, முட்டை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.