×

பொது வேலைநிறுத்தம் எதிரொலி தி.பூண்டி, நீடாமங்கலத்தில் இன்று கடைகள் அடைப்பு

திருத்துறைப்பூண்டி, டிச. 8: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்க செயற்குழு கூட்டம் வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாய சங்கங்கள் கேட்டு கொன்டதற்கு இணங்க இன்று ஒரு நாள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு செய்வது ஆதரவு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது என்று தலைவர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். நீடாமங்கலம்: நீடாமங்கலம் வர்த்தகர் சங்க தலைவர் ராஜாராமன், செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அனைத்து விவசாய சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று விவசாய மசோதாவை திரும்ப பெற கோரி இன்று(செவ்வாய்கிழமை) நடைபெறும் முழு கடை அடைப்பு போராட்டத்தில் அனைத்து பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒருமனதாக ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் முழு கடை அடைப்பு செய்வதென முடிவு செய்யப்பட்டது.ஆகவே அனைத்து வர்த்தகர்களும் இன்று தங்களது கடைகளை அடைத்து முழு ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags : strike ,shops ,Needamangalam ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து