×

வடுவூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

மன்னார்குடி, டிச. 8: மாட்டுக்கு வைக்கோல் தூக்கி வந்தபோது மாடியில் இருந்து கால் இடறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் வடுவூர் அருகே சோகத்தை ஏற்படுத் தியது. திருவாரூர் மாவட்டம் வடுவூர் காவல் சரகத்திற்குட்பட்ட கருவாக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகன் பழனி (36). விவசாயி. இவர் மாடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், மாட்டுக்காக வீட்டில் வைத் திருந்த வைக்கோல் தீர்ந்து போனதால் அருகில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டு மாடியில் இருந்த வைக்கோல் கட்டுகளை எடுத்து கொண்டு படியில் இறங்கி வந்த போது எதிர்பாராத நிலையில் கால் இடறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு சென்ற வடுவூர் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த பழனிக்கு அஸ்வினி (25) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். மாட்டுக்கு வைக்கோல் தூக்கி வந்தபோது மாடியில் இருந்து கால் இடறி விழுந்து விவசாயி பலியான சம்பவம் வடுவூர் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : terrace ,Vaduvoor ,
× RELATED பெங்களூரு அருகே பேடர்ஹள்ளி பகுதியில்...