×

எம்பி வைத்திலிங்கம் வழங்கினார் முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் 19ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

பட்டுக்கோட்டை, டிச. 8: தமிழ்நாடு வருவாய்த்துறை முன்னாள் அமைச்சரும், அமமுக மாநில ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் தந்தையுமான எஸ்.டி.சோமசுந்தரத்தின் 19ம் ஆண்டு நினைவு நாளையொட்டி செண்டங்காடு கிராமத்தில் உள்ள எஸ்.டி.சோமசுந்தரத்தின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சேகர் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய அமமுக செயலாளர் ரங்கராசு வரவேற்றார். மதுக்கூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜபிரபு, பட்டுக்கோட்டை தெற்கு ஒன்றிய செயலாளர் ரவி, மதுக்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தென்னரசு ஆகியோர் எஸ்.டி.சோமசுந்தரத்த்தின் சிறப்புகள் குறித்து பேசினர். ஊராட்சி செயலாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் அமமுக முன்னோடிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தினர். பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் திரளான மக்களும் பங்கேற்று ௭ஸ்.டி.எஸ். உருவ சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினர். அதேபோல் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் இயக்குனர்கள், முதல்வர், பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள், கல்லூரியின் நிறுவனர் எஸ்.டி.எஸ். படத்துக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்.

Tags : SD Somasundaram ,Vaithilingam ,
× RELATED கை சின்னத்துக்கு போடும் ஓட்டு.. மோடிக்கு வைக்கும் வேட்டு..