×

வைத்தீஸ்வரன்கோயிலில் குளம் நிரம்பி வீடுகளை சூழ்ந்த தண்ணீர் அகற்றம்

சீர்காழி, டிச.8: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயிலில் தாமரைகுளம் நிரம்பியதால் தெருவுக்குள் புகுந்த மழைநீர் அகற்றப்பட்டது. சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் தாமரைக் குளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் குளம் நிரம்பி தெருவுக்குள் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். இதனை அறிந்த வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தாமரை குள தெருவுக்கு சென்று பார்வையிட்டு ஊழியர்கள் மூலம் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதேபோல் தெற்குவெளி தெரு, விளக்கு முக தெருவில் 100க்கு மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு சிரமத்திற்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலர் சம்பவ இடத்துக்கு ஊழியர்களுடன் சென்று பார்வையிட்டு பொக்லைன் இயந்திரம் கொண்டு தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதனால் அந்த பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர் வடிய தொடங்கியுள்ளது.

Tags : pond ,Vaitheeswarankoil ,houses ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்