×

நாகை அருகே பைக்குகள் மோதலில் வாலிபர் பலி

நாகை,டிச.7: நாகை அருகே கீழ்வேளூர் தாலுகா கூத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் அருண் (27). இவர் கடந்த 4ம் தேதி நாகையிலிருந்து கோட்டை வாசல்படியை நோக்கி பைக்கில் சென்றார். நாகை மருந்து கொத்தள தெரு அருகே சென்ற போது எதிரே வந்த மற்றொரு பைக் அருண் சென்ற பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து நாகை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Walibar ,Naga ,
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா