×

முறையூர் மீனாட்சி கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சிங்கம்புணரி, டிச. 8:  சிங்கம்புணரி அருகே முறையூரில் மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோயில் உள்ளது. சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயிலில் நேற்று கார்த்திகை மாத 4வது சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து லிங்க வடிவில் சங்குகள் அடுக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின்னர் சங்கில் ஊற்றப்பட்ட புனித நீரை கொண்டு மீனாட்சி அம்மன், சொக்கநாதருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன், சுவாமி காட்சியளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் சிவபுரிபட்டி சுயம்பரகேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடந்தது.

Tags : 1008 Sangabhishekam ,Muraiyur Meenakshi Temple ,
× RELATED வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்