×

பெண்ணிடம் செயின் பறிப்பு

திருப்பரங்குன்றம், டிச.8: திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளத்தை சேர்ந்த முருகன் மனைவி சிவகாம சுந்தரி. இவர் தனக்கன்குளம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு சென்றபோது. பின் தொடர்ந்து டூவிலரில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர், சிவகாம சுந்தரி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது சிவகாம சுந்தரி அவர்களுடன் போராடியதில் செயின் பாதி அறுந்த நிலையில் சுமார் 2 கிராம் அளவிலான பாதி செயினை மட்டும் பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பியோடி விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Chain ,
× RELATED நகைகளை இப்படித்தான் வடிவமைப்பு செய்கிறார்கள்!