×

திருவாரூர் மாவட்டத்தில் 1010 திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி

திருவாரூர், ஏப். 5: திருவாரூர் மாவட்டத்தில் 1010 திமுக முன்னோடிகளுக்கு, இளைஞர் அணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கினார். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உற்ற நண்பர் தென்னன் நூறாவது பிறந்தநாள் விழா, மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவான மறைந்த சித்தமல்லி சோமசுந்தரம் படத்திறப்பு விழா மற்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் 70 வது பிறந்த நாளையொட்டி கட்சியின் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா என முப்பெரும் விழா மாவட்ட திமுக சார்பில் திருவாரூரில் நேற்று கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் அமைச்சரும், தாட்கோ தலைவருமான மதிவாணன், எம் எல். ஏ. டி ஆர் பி ராஜா, முன்னாள் எம்எல்ஏ அசோகன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, இளைஞரணி மாநில துணை செயலாளர் இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளைஞர் அணி மாநில செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் முன்னோடிகள் 1010 பேருக்கு பொற்கிழிகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் தன்ராஜ், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், துணை செயலாளர் முத்துப்பேட்டை கார்த்திக், ஒன்றிய செயலாளர்கள் புலிவலம் தேவா, பாலச்சந்தர், கலியபெருமாள், மனோகரன், நகர செயலாளர் வாரை பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் தியாகபாரி,செந்தில், மாணவரணி மாவட்ட அமைப்பாளர் அமுதாசந்திரசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முத்து வரவேற்றார். முடிவில் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சோம செந்தமிழ் செல்வன் நன்றி கூறினார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் 1010 திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி appeared first on Dinakaran.

Tags : 1010 DMK ,Tiruvarur district ,Tiruvarur ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி