×

சீர்காழி அருகே கொண்டலில் திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்

சீர்காழி,ஏப்.5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கடைவீதியில் திமுக சார்பில் ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது. சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் இராம.இளங்கோவன், மாவட்ட அவைதலைவர் சீனிவாசன், நகர செயலாளர் சுப்பராயன், மாவட்ட கவுன்சிலர் விஜேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பிரபாகரன் வரவேற்றார்.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி தலைமைக் கழக பொறுப்பாளரும் மாநில மாணவரணி இணை செயலாளரும் மண்ணை நகர மன்ற தலைவர் சோழராஜன் புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட பிரதிநிதிகள் விஜயகுமார், மகேந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் வீரமணி, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன், ஒன்றிய பொருளாளர் இத்ரிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சீர்காழி அருகே கொண்டலில் திமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Kondalil ,Sirkazhi ,Kondal Kadayveedi ,Sirkazhi, Mayiladuthurai ,Kondal ,Dinakaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்