×

நாகப்பட்டினத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டி

நாகப்பட்டினம்,ஏப்.5: நாகப்பட்டினத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டியை கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் வழங்கினர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 10 சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டி வழங்கும் விழா நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் தலா ரூ.15 ஆயிரம் மானியத்தில் 10 சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நடமாடும் காய்கறி வண்டிகள் வழங்கப்பட்டது. கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் வண்டிகளை வழங்கினர். எம்எல்ஏ முகம்மதுஷாநவாஸ், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத்தலைவர் செந்தில்குமார், டிஆர்ஓ ஷகிலா, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இணை இயக்குநர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post நாகப்பட்டினத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு நடமாடும் காய்கறி விற்பனை வண்டி appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Collector ,Arunthamburaj ,Tamil Nadu Fisheries Association ,President ,Gowthaman ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் நகராட்சி குப்ைப...