- பூந்தமல்லி
- எம்எல்ஏ ஏ கிருஷ்ணசாமி
- திருவள்ளூர்
- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்
- சட்டமன்ற உறுப்பினர்
- ஏ கிருஷ்ணசாமி
திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 16 ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளுவதற்கு தேவையான டிராக்டர்கள் மற்றும் மின்கலன் வண்டிகள் வழங்கும் விழா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய சேர்மன் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். ஒன்றிய திமுக செயலாளர் ஜெயசீலன், துணை சேர்மன் பர்கத்துல்லா கான், ஒன்றிய கவுன்சிலர் எத்திராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) ராஜேந்திரன், (வட்டார ஊராட்சி) ஜெ.மாணிக்கம், மேலாளர் (நிர்வாகம்) சுந்தர்ராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயலலிதா ஆகியோர் வரவேற்றனர்.
இந்த விழாவில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஈக்காடு, காக்களூர், அரண்வாயல், பெருமாள்பட்டு, நத்தமேடு, புட்லூர் ஆகிய 6 ஊராட்சிகளுக்கு தலா ரூ.8.50 லட்சம் வீதம் ஆக மொத்தம் ரூ.51 லட்சம் மதிப்பிலான டிராக்டர்களை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் வழங்கினார். அதே போல் அரண்வாயல் ஊராட்சிக்கு 2 மின்கலன் வண்டிகளையும், அரும்பாக்கம், ஆயலூர், கல்யாணகுப்பம், அயத்தூர், ஈக்காடுகண்டிகை, கிளாம்பாக்கம், கீழானூர், மேலானூர் ஆகிய 8 ஊராட்சிகளுக்கு தலா ஒரு குப்பை அள்ளும் மின்கலன் வண்டிகள் என மொத்தம் 10 மின்கலன் வண்டிகளை 9 ஊராட்சிகளுக்கு தலா ரூ.2.65 லட்சம் வீதம் ரூ.26.50 லட்சம் மதிப்பீட்டில் 10 மின்கலன் வண்டிகளை அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவர்களிடமும் வழங்கினார்.
இதில் மாவட்ட கவுன்சிலர்கள் தென்னவன், இந்திரா பொன்குணசேகர், பொதுக்குழு உறுப்பினர் விமல்வர்ஷன், ஒன்றிய கவுன்சிலர் பூவண்ணன், திமுக நிர்வாகிகள் சொக்கலிங்கம், தரணி, குமார், சுகுமார், கபிலன், சதீஷ்குமார், ஈக்காடு நாகராஜ், சௌந்தர்ராஜன், ஊராட்சி தலைவர்கள் சீனிவாசன், சுமிதா சுந்தர், காவிரி அனபு, உஷாபிரேம், லாசனா சத்யா, ஜெருஜோன்ஸ் பிரியதர்ஷினி ஸ்ரீதர், ராஜசேகர், லட்சுமணன், சிவசங்கர், தேவிதாஸ், லோகம்மாள், சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
The post 16 கிராம ஊராட்சிகளுக்கு குப்பை அள்ள ரூ.77.50 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்கள், மின்கலன் வண்டிகள்: பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி வழங்கினார் appeared first on Dinakaran.