×

பெரம்பலூரில் நடந்தது பெரம்பலூரில் நடந்தது நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம்

பெரம்பலூர், டிச.7: பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழ கத்தின் சார்பாக பெரம்ப லூரில் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் அமைப்பின் சார்பாக, பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் உள்ள தனியார் கூட்ட அரங்கில், நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் சுல்தான் மொய்தீன் தலைமை வகித்தார்.

பெரம்பலூர் மாவட்ட செயலாளர் குத ரத்துல்லா, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மீரான் மொய்தீன், மாவட்ட பொருளாளர் முஹம்மது இலியாஸ்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் ஜமாஅத்துல் உலமா சபையின் மௌலவி அப்ராருல் ஹக் ரஷாதி, காங்கிரஸ் கட்சி யின் மாநிலபொதுக்குழு உறுப்பினர் சிவாஜி மூக்கன், மார்க்.கம்யூ.கட்சியின் மாவட்டசெயற்குழு உறுப்பினர் செல்லதுரை, இ.கம்யூ மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஸ்டாலின்,

இந்திய ஜனநாயக கட்சி யின் மாவட்ட தலைவர் ரகுபதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டசெயலாளர் சர்பு தீன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை பேசினர். கருத்தரங்கில் சமூக நீதி படைப்பாளர் சங்க மாநிலச்செயலாளர் அரும்பாவூர் தாஹிர்பாஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Tags : seminar ,Perambalur Justice Day ,Perambalur ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...