×

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு வலுவான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:

இலங்கை கடற்படையினரால் நேற்று (9ம் தேதி) ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 7 இந்திய மீனவர்கள் அவர்களது இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி படகுடன் சிறை பிடிக்கப்பட்ட மற்றொரு துயரமான சம்பவத்தை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு கடலை நம்பியே உயிர்வாழ்ந்து வரும் நிலையில் தற்போது சிறை வாசத்தின் அச்சத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

மீனவர்கள் நீண்டகாலமாக சிறையில் வைக்கப்படுவதால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு, அவர்களின் குடும்பங்களுக்கு கடுமையான மன உளைச்சலையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை திறம்படக் கையாண்டு கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட இந்திய அரசு உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags : Sri Lankan Navy ,Chief Minister ,MK Stalin ,Union Minister ,Chennai ,Union Minister of External Affairs S Jaishankar ,Union Minister of External Affairs ,S Jaishankar… ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...