×

மதுபோதை தகராறில் டிரைவர் அடித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலு (50). ஆட்டோ டிரைவர். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் தணிகைவேல் (38). இவர் கார் டிரைவர். இருவரும் மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு வழக்கம்போல் மதுபோதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தணிகைவேல், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து பாலுவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பாலுவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் பாலுவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் பாலு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து, தணிகைவேலை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாலு நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து செம்மஞ்சேரி போலீசார் இதனை கொலைவழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மதுபோதை தகராறில் டிரைவர் அடித்து கொலை: பக்கத்து வீட்டுக்காரர் கைது appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Balu ,Semmancheri Tsunami Residential Area ,Dinakaran ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல்