திருவள்ளூர்: வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் பணியாற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து அதற்காக நியமிக்கப்பட்டுள்ள திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் - காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆவடி சா.மு.நாசர், டி.ஜே.கோவிந்தராஜன், திருத்தணி எம்.பூபதி ஆகியோர் தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் ஆ.கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர்கள் எஸ்.மூர்த்தி, ஏ.தேவேந்திரன் ஆகியோர் வரவேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக சட்ட ஆலோசகர் என்.ஆர்.இளங்கோ எம்பி கலந்துக்கொண்டு டிஜிட்டல் விளக்கம் அளித்து ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், வழக்கறிஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.